Thursday, December 15, 2011

தென்றலின் வணக்கம்..

 முன்னொரு காலத்தில் இலங்கை திருநாட்டின் மத்திய மலை நாட்டை வளபடுத்தும் பொருட்டு ஆங்கிலேயரினால் இங்கு கொணரப்பட்ட மாந்தரின் கதையா நிலையை நிலைப்பாட்டை வலிகளை பதிவு செய்யும்  ஒரு இணைய மேடை இந்தத் தளம்.

வளம் கொழிக்கும் ஒரு வாழ்வை இங்கு தேடி வந்து விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் ஆகிவிட்ட ஒரு இனத்தின் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட சரித்திரத்தை பதிவு செய்ய முயலும் ஒரு சிறு முயற்ச்சி...

இனிவரும் காலங்களில் இணையம் ஒரு இன்றியமையாத ஊடகமாகும் ... வெறும் அச்சிலும் பேச்சிலும் மட்டுமே இவர்தம் பிரச்சினைகள் பேசப்படுவது உலகை எட்டாமல் போகக்கூடும்... எனவே என்னால் இயன்றவரை அவற்றை வலையேற்ற இந்த வலைப்பூவை களமாக பாவிக்கிறேன்....

என் தனிப்பட்ட ஆக்கங்கள் மட்டுமன்றி இதுவரை வெளிவந்த வெளிவர இருக்கும்  மலையகம் சார்ந்த காத்திரமான ஆக்கங்களையும் இந்த வலைப்பூ சுமந்து வரும்.

இப்படிக்கு
தென்றல் 

1 comment:

  1. வணக்கம் தென்றல்.
    நல்ல விடயத்தை கையில் எந்துகின்றீர்கள் உங்களின் மன ஓட்டங்களை மலையக விடயங்களை  இங்கு பதிவாக இட்டு எங்களின் பார்வைக்கு வலம் வரச் செய்ய வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete